Posts

Showing posts from October, 2018
Image
Title : ஒப்பாரி  ( A  funeral  Elegy  ) ஊதுவத்தியும் பூவும் மணக்க....அத எடுன்னு  இத  எடுன்னு கூச்சலும்... காபி கொண்டானு  தண்ணி கொண்டானு  அதிகாரமும்... ! வாங்கேனும்  சொல்லல ! போங்கனும் சொல்லல ! எங்கேன்னும்  சொல்லல! எப்போன்னும்  சொல்லல!... பந்தல எழுப்ப பந்திய  போட.. நாள் பாக்க  நேரம் பாக்க... அங்காளி பங்காளினு ஒரு கூட்டம்... தெரிஞ்ச கூட்டம் ;தெரியா கூட்டம்... தண்ணிக்கு ஒரு கூட்டம்; தனெக்கென்னன்னு ஒரு கூட்டம்...திக்கு திசை இல்லாம நான்  கிடக்க...  அடிச்சிக்கிட்டும் பிடிச்சிக்கிட்டும் இருந்தது எல்லாம் ஒன்னா கவனிக்க.... பேந்த பேந்த நான் முழிக்க... முன்னையும் பின்னையுமா கால் எடுத்து வெக்க... "அய்யோனு !!"ஒரு கதறலடி கலங்கியது கண்களடி !!பச்ச நரம்புகாரி அவ.... சுண்டி இழுக்கும் அழகு அவ... பிடிச்சு போன காரணத்தால கூட்டிகிட்டு  போனானாம்... பெத்த மனம் புலம்பையில பித்து பிடிச்சு போனதாம்  !!! கடத்த தெரிஞ்ச ராசாவுக்கு காயம் சற்றும்  தெரியல.. காலம் கடந்து போனாலும் காயம் கடந்து போகுமா ! இன்னும் நெனச்சி...
Image
Title: காதல் காட்டும் பாதை ஆயிரம் முறை உன் கருமையை கண்டுள்ளேன்.... சலிக்காமல்...பலமுறை உன்னில் தொலைந்தும் உள்ளேன்...வழி தேடி அலைந்தும் உள்ளேன்...   எனினும் அறியா நேரத்தில் என்னுள் வந்தது ஏனோ !! வெறுமையை கொண்டவன் நீ, என்று பலர் கூறினும் அதில் வண்ணங்களை பார்த்தவள் நான் !! உன் தனிமையை கருநிறம் கொண்டு நீ  மறைத்த போதும் அதில் நட்சத்திரங்களை ஒட்ட வைத்து அழகு பார்த்தவள் நான்... உனக்கென்ற வட்டத்தை   இந்த சமூகம் போட்ட போதிலும் உன் அருகில் வர தயக்கம் இல்லாதவள்  நான்...  உன் தனிமையை கருநீல மேகங்களை கொண்டு நீ மறைத்த போதும் மாரியாய்  பொழிந்து   போக்கியவள் நான்.... கருமையின் ஒளியில் நீ ஒளிந்திருந்தும்... உன்னை காண நினைக்கும் ஒளி  நான்.... கட்டி அணைத்துக்கொண்டாள் கரி பட்டுவிடுமோ என்று தயக்கம் இல்லாதவள் நான்... உன் மணத்தை விரும்புபவள் நான்... உன்னை மணமுடிக்க கருதுபவளும் நான்... நம் மண்ணின் நிறமல்லோ நீ !! என் கருவிழி கருப்பு.. என் கருநீல  கூந்தல் கருப்பு... இரவின் நிறமும் கருப்பு...அந்த கற்பக்கிரஹ  இறையின் நிறமும் கருப்பு.... என் தாயின...