Posts

Showing posts from February, 2019
Image
Title : சேற்றுப்பூக்கள்...!! . . மற்றொரு  பதிவு.. Another little story ❣️by சென்னை  தமிழச்சி  கீர்த்தி  திருநாவுக்கரசு  . .சிலர் புரியும் தவறின் விளைவாய்  குழந்தைகள் படும் இன்னல்களை  குறிப்பதே "சேற்றுப்பூக்கள்" .  .  . . . அந்த கண்கள் யாவும் ஏக்கங்கள் கொண்டு பார்ப்பது ஏனோ?  ஏன் இந்த இரக்கப்  பார்வை? அய்யோ பாவம் என்று கை நீட்டி வினைவது ஏனோ?  சிலர் அவமதித்து சலித்துக்கொள்வது ஏனோ?  நாங்கள் யாதேனும் வேற்றுலகத்தின் பிறப்பா இல்லையில் அரியவகை பொருட்காட்சி பொருளா ?  பலர் வந்து பார்த்து செல்ல?  சிலர் அழைத்து செல்ல? அவர்களை அழைத்து செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள்?  எங்களை காண வருபவர்கள் யார்?  புதிதுபுதிதாய் வார்த்தைகள் பேசக்கேட்டோம் "அம்மா, அப்பா " என்றெல்லாம்  அவற்றின் அர்த்தம் யாதென அறியோம் ! சிலர் எங்களை கண்டு புன்முறுவல் புரிவர்...  மேலும் சிலர் புண்ணியம் என்பார்கள்,  பாவம் என்று கருணை பார்வையும்  கொள்வார்கள்  !! காரணி அறியோம்...