Title : தரமணி என்னை சிறிது சிறிதாய் உனக்குள் கொண்டு வந்தையாடி !! உன் இரவின் அழகும் ! அந்த அமைதியும் தான் என்னை கவர்ந்தது !!! ஒரு வருடம் ஆகியது உன்னை சந்தித்து அன்று போல் இன்றும் மாறா இளமையும்... சொகுசு கார்களும்.. கெஸ்ட் ஹௌஸ்களும் (Guest house)...பைவ் ஸ்டார்(Five star) வாழ்க்கையும் பணக்கார நண்பர்களும்... IT நிறுவனங்களும் அடேடே .. ம்ம்ம்ம் பலமுறை உன்னை கண்டும் உன் வாழ்கை கண்டும் பொறாமை அடைந்துள்ளேன்.... உனது வளர்ச்சி என்னை வியக்கவும் வைத்தது... பயப்படவும் வைத்தது... எனினும் காதலில் நீ நீங்கா இடம் கொண்டுள்ளாய்... பகட்டு வாழ்க்கையில் மூழ்கிவிட்ட உன்னை இன்றும் அழகாய் காண்பிப்பது இந்த காதல் தான் !! நினைவுள்ளதா காதலியே !! உன்னை வந்தடைய நான் பட்ட இன்னல்கள்.... சுடும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இஸ்திரி போட்ட டிப் டாப் உடையும் படிய வாரிய தலைமயிரும் பசியும் பாராமல்.... தினம் ஒரு காதல் கடிதம் எழுதி எழுதி தேய்ந்தது கைகள் மட்டுமா ! அயராது நடந்ததால் என் கால் செருப்பும் தான் !!எனினும் இரவில் நம் கால்களை தீண்டிய அலைகளும்... தாகத்தை தீர்த...